.jpg)
உறவின் சுயநலங்களோ
சுயதேவைகளின் பங்களிப்பு
சுவாசத்தில் உள்ளவரை
முற்றுப் பெறுவதில்லை..
முற்றுப்பெறும் சமயம்
தொடர் புள்ளிவைக்க
அனுமதிப்பதில்லை
இவ்வுலகம்...
மரணத்தின்பின் சுயநலங்கள்
மரணித்துப் பயனென்ன?
இதை அனுமானிக்கத்
தெரியாத மானிடனோ
சுயநலத்தின் உச்சமதில்
இன்னும் அகங்காரமாகவே
வீற்றிருக்கிறான்!!
.
0 கருத்துரைகள்:
Post a Comment