கவிச்சாரல்

அணு அணுவாக வலிக்கும் வலியதில் அன்பே வலியது..

அன்பினில் அடங்கும் இதயம் அமைதிதனில் தளிர்த்து துளிர்க்கும்.வருக _/\_தோழமையே





















வாவென வரைகோடிட்டான்
தெரியாத பாதைகளும்
தெளிவாக தெரிந்தது..
போவென திரைபோடவே
போலியன உயிரதுவும்
போகாமல் நோகிறது
போராடி போராடியே..

வேகாமல் வேகவைத்தல்
என்னநியாயமோ வேடிக்கை
ஏதும் இல்லாமலே..
எண்ணற்ற எண்ணங்கள்
ஏட்டினில் ஏறினாலும்
என்றுமே நீகாண இயலாது
உனக்காவே கிறுக்கப்பட்ட
உள் ஆழ்ந்த வாசகங்களை..

ஈகைதனை விதைத்த
இறைவன் இறக்கமின்றி
விதித்து விட்டான்,
ஓலையதைமட்டுமே இதய
ஓசைதனை கேட்கச்சொல்லி
பலரின் இதயங்களை
பண்போடு சுமக்கும் பரகசிய
அந்தரங்க அதீதபந்தமிந்த
நாற்குறிப்பின் ஏடுகளே

இனி உனக்கான அனைத்தையுமே
அதனிடமே கேட்கின்றேன்.
நலம் சொல்லவோ கேட்கவோ
ஏட்டால் என்றும் முடியதே
மொழிபெயர்க்க முடியா
எண்ணற்ற இவள்மௌன
மொழியை போல..

.





















காத்திருந்து எம்மை கடக்கும்
நொடிகளுக்கு என்றுமே
காத்திருப்பின் வலி
புரிவதில்லை..

அதனால் தானோ என்னவோ
ஒவ்வொரு நொடிதனையும்
நோகாமல் கடக்கின்றதது..
.





















விடியல்கள் தோறும் தொலைந்து
போகிறது
விறையமாக விரைந்தேதான் இவள்
கனவுகள்
ஏக்கங்கள் பொழியும் ஏகாந்த
பொழுதுகள் யாவும்
உன்நினவுகளின் தேக்கத்தோடு தினம்
ஏமாறுகின்றது எண்ணங்கள் எல்லாம்
சொல்ல மொழியறியா குழந்தை
போல..

மனம் அதுவும் தவிக்குது நாளும்
மஞ்சமது உன் நெஞ்சமாகாதா என்று
நிஜமதுவோ மறைவாக நின்று
நிதர்சனம் வழிமொழிகிறது
``அதுவுன் மறைகணக்கதில் வரவு 
  இன்றதை மறந்திடு என்று”..

நிஜத்தின் காயந்தனை ஏற்க
நிழல் கூட விரும்புவதில்லை..
வடுக்கள்தனில் வாடுவது என்றுமே
நிஜத்தில் பாசங்களேஅன்றி
வேறில்லை.-

மறைகணக்கதில் மறைந்ததுவும்
இவள் உயிரேயன்றி உன்காதலில்லை 
எனதன்பே...
.





















மனமோ மாயக்கூண்டில் சிறைப்பட
மாயமாக கண்கட்டிச் செல்கின்றது
உள்ளந்ததனில் புதிரான புதிரொன்று
உயிர்பிழியும் உணர்வுக் காட்டில் நின்று
உள்ளம் உருகித்தான் சொல்கிறது
உயிர் சுவாசந்தனில் உள்ளூரக் கலந்த
உறவு பட்டியலில் நீயும் உறுதியாக
உயிர் வாழ்கின்றாய் என்று....

அந்தந்தனில் பயணிக்கும் உணர்வதின்
ஆதிக்கம் அலைபாய ஆதிதனை
ஆதரிப்பவள் அல்லவே இவள்.
இதயமதில் இமையமாக கனக்கிறது
இன்றியமையாத உறவொன்று இன்று
இயலாமல் தவிக்கையில்..

தலைகோத முடியா காலத்தூரமதில்
தலைசாய்க்க நினைத்து, தத்தளித்து
திணறும் போழுததை பரிசளிக்க
தாகித்த இவளால் இயலவில்லை,
தினந்தோறும் தித்திக்கும் வாழ்வுனக்கு
திவ்யாமாய் அமைய வேண்டியே
இந்த மௌனப் பொழுதுகளில்
நிசப்த போராட்டங்கள்..
.





















காலம் வந்தெம்மில் தலைக்கோலம்
போடுது அன்பென்று நாளும்..
ஆயினும் பொய்யான தருணங்கள்
அதிகமாக தலைதூக்க நினைக்கையில்
தானின்று தன்னிலை மறந்து முண்டமாக
நடமாடுகிறான் மனிதன் எனும் ஜடம்..

.





















வாழ்வில்பல வாழ்வற்ற தருணங்களில்
வாழ்வில்லாமல் வாழச் சொல்வது
வஞ்சனையூடா இல்லை வதைதனை
வாழச்சொல்லியா

புரியவில்லை என வினாதொடுத்தலின்
ஆரம்பம் வேதனையதனின் உச்சமேயன்றி
வேறில்லை..
ஆழம் தெரிந்தும் ஆற்றம்மென்றேதும்
இல்லை இவ்வுலகில்..

.

Top Menu

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Top Tabs

About Me

My Photo
கொழும்பு, Sri Lanka
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

கடிகாரம்

இனிதே ரசிக்க..

சில உண்மைகள்..

முகநூல்

நிழலின் பரிணாமங்கள்.

Followers

நீ அம்மா..

பொய்யானஉலகில்
பொய்யற்ற ஓர் ஜீவன் நீயேஅம்மா.ஆயிரம்சொந்தம் வந்தாலும் இறுதிவரையில் நிலைப்பதுன்னுறவுமட்டுமே எமைமட்டுமல்லயெம் பாரங்களையும்
கடைசிவரையில் சுமப்பதும்நீயே..
அதனால் தான் நீஅம்மா

அந்தி நேரத்தென்றல்.

சேரும் சொந்தங்களோ இறுதிவரை நிலைப்பதில்லை,நல்ல நண்பனின் நட்போ சாகும் வரையில் எம்மை விட்டு பிரிவதில்லை.

உன் பேயரை சொல்லும்..

காலம் முழுதும் சேர்ந்திருக்க ஆசைதானாயினும். ஏதோவொரு வழியற்ற வழியொன்றதால் வலிக்குதென்இதயம்.

அழகாய்ப் பூக்குதே..

உண்மையான காதலின் ஆழம் இதுவரை யாராலும் விளங்கவோ,விளக்கவோ படாதது.கண்களால் வந்த காதல் கண்களுக்குமட்டுமே விருந்தாகாமல் மற்றக் கண்களுக்கும் விருந்தாக்கப் படாமல் இதயத்தோடு கலந்து இனிதே வாழட்டும்.

கரையும் நினைவுகளில்

கரையும்நினைவுகளில் நிஜமானவளென்றுமே நீமட்டும்தான் உன்நினைவில் கழியும்பொழுதுகள் தவக்கோலங்களே..

வலி வலி..

சோகத்தின் முகவரி எதுவெனக்கேட்டால் அது உனதெனதுபெயரே.இலக்கம் இல்லாமலேயே எம்மை வந்து சேரும் அஞ்சல்..

உலகம் ஒரு..

காதலின் வேட்கைதான் கண்ணீரின்சாதனைமனதில் நாம்விதைத்தகனவுகள்கானல் நீரில் நாம்தீட்டியகடிதங்கள் ஜென்மங்கள்முழுதும்மழுது தீர்த்தாலும்உறவற்றுப்போன உன்னன்புக்கு ஈடேது?

நன்றி சொல்லவே..

நன்றியென்னறசொல்லில் உன்னன்பை சிறைசெய்ய இயலாது, இருந்தும் நன்றியென்ற சொல்லுக்கு மறுவடிவமோ இன்னும் கண்டறியப்படவில்லை அதனால் தானிந்தநன்றி.

நிலவோடும் மலரோடும்..

நிழலின் பரிணாமங்கள் என்றும் இருளதற்கே பரிந்துரைக்கப் படுகிறது.. அதேபோல் ஏனென்ன்ற கேள்வியும் என்றுமே தனிமையதையே நேசித்து எம்மையும்மதற்குத் துணையாக்குகிறது, தன்தனிமையைப் போக்குவதற்காக..

கங்கை நதியே..

எம்மை நேசிக்கும் பந்தங்களே, சொந்தமாக சந்தேகத்தை ஆதரிக்கும் போது, விடியும் திசையோ விதியை சார்ந்தது...

நன்றி சொல்லவே..

துயரே வரமெனப்பெற்ற எனக்கு,சுகவரி சொன்ன தேவனே, வாழும்வரையுன் நிழலெனத் தொடர்ந்திருப்பேனெனன்பே.

காதல் இல்லை..

உன் வாழ்கையை எழுதியவன் யாரோ அதைவாழும் நாட்கள் மட்டுமேயுன்னோடானது. உறவின் உச்சக்கட்டம் சாதலையேசார்ந்தது,அதையும் கொஞ்சம் புரிந்து கொள்மனிதா!

ஒருமுறை தான்.

கண்களால் மௌனித்து
மௌனமகஉறவாடியயெம்
உள்ளுணர்களெம்முள்ளே மௌணமாக மரணிக்கிறதின்று உண்மையதின் நிசப்தத்தின் மெய்யிதுவோ சிதரலுணர்வுகளின் மரணமதிலுணர்கிறோம் பெற்றவரின்பாசமதை. சிலதரக்காலத்தின் விடுகதையதற்கு விடையாவதெம் காதலே அன்றிவேறில்லை தவிக்கிறது தினதினம்மனது உறவுகளினதுசஞ்சீவிகேட்டு...

கங்கைக்கரை மன்னனடி..

என்னுள்ளம் மட்டுமல்ல உயிரும் உன்கையில்தான். நெஞ்சிலெழும்அன்பலையில் மூழ்கிப்போனவள் நானே ஜென்மஜென்மங்கலானாலும் எனைப்பந்தாடுவதுன் நினைவு மட்டுமே...

எழுதாத விதியிதுவோ

குற்றம் புரியாமலயே வேதனைகளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பது தான்னிந்தக் காதலின்எழுதாதவிதியோ!

நீதான்வேண்டும்.

நினைவுகளும்சுமையென
மாறவே தள்ளடுகிறது என்னுயிருமமுன்னன்பின்றி..

என்னமறந்த பொழுதும்..

உறக்கத்திலுமுன் நினைவுகளை மறக்காது உன்பக்கம் திருப்பும் விந்தை என்னவோ உன்னோடான என்நினைவுகளுக்கே இருக்கிறது.

உயிரேஉயிரின்.

உறவுகள்தொடர்கதையில் கானாமல்போவதென்னவோ நாம்தான் உயிர்பிரிந்தாலும்
எம்மையாட்கொண்டஉறவின்
ஞாபகங்கள் எம்மைவிட்டுப்
போவதில்லை....

தென்றல் காற்றே...

உன்பிரிவின் ஒவ்வொரு நொடியிலுமென்னாயுளின் மறைநிசப்தமதுவே ஒழிந்திருக்கிறது. மௌனங்களேயென் வாழ்வானாலும் அதையும் மொழிபெயர்க்கவுன் உள்ளமதுவே வேண்டும் தருவாயா என்னாயுள் உள்ளவரை.

நான்னுறங்க வழியில்லையே

உன்பிரிவால் நாதியற்று
தவிப்பது நான்மட்டுமல்ல
நம்வாழ்வில் நாம் கண்ட
சந்தோஷநிமிடங்களுந்தான்.

உணராதோ என்னுயிர்துடிப்பு

வாழ்நாற்களுக்கேசொந்தமற்ற நாம்சொந்தங்களைநாடி விதியைச் சாடுவதேனோ?

ஒருமூன்றாம்.

சாபத்தையே வரமாக
மாற்றியவனே நாளும்
துதித்து போற்றினாலும்
என்றென்றுமென்கடவுள்நீதான்.

கூடு எங்கே..?

உள்ள மனக்கிடுக்கை மட்டுமே உறவாகிவிட்ட எமக்குபோகும் வழியோ தெரியவில்லை ஆனால் பயணம் மட்டும்தொடர்ந்து கொண்டேதான்னிருக்கிறது....

எங்கிருந்து..

Powered by Blogger.

Pages