கவிச்சாரல்

அணு அணுவாக வலிக்கும் வலியதில் அன்பே வலியது..

அன்பினில் அடங்கும் இதயம் அமைதிதனில் தளிர்த்து துளிர்க்கும்.வருக _/\_தோழமையே























கருவில் நாம் துளிர்த்த நாள்கொண்டு
கனவுகளில் தளிர்க்கும் அவள் கற்பனைகள்
அளவல்லவே..
வியாகியானம் பல விவாதித்தாலும்
விமர்சனம் எனும் சொல்லுக்குள்
விபரிக்க இயலாதது  அவளன்பேயன்றி
வேறில்லையே..

உன் தாய்மையில் வியந்து போகிறேன்
இந்நோடியும் உன்மடிதரும் 
நிம்மதிக்கணம் கண்டு..
உயிரால் உயிர் பிரியும் தருணம் வரை
உன்னுயிரினில் விழுந்தேனும்,
 உன் சுகமற்ற போழுதுகளை நான் 
சுமப்பேன் தாயே..
உன் சுமை சுமக்கும் சுமையேற்றியாக
ஓரு பொழுதுதேனும் வரம் கொடு தாயே
ஒருநோடி நிம்மதிப் பெருமூச்சு எனக்குள்
நுகர...
வாழ் நாளின் நான் வாழ்ந்த ஓர் துளி
பலனை நான் உணர...
.























தனிமையில் என் ஆசைகளதோ
தனித்து தவிக்கையில்,
தடயமாய் புலம்புகின்றது 
உன் எண்ணங்கள் ...
.





















பிறக்கும் போதே இறத்தலதோ
மெய்யாழாத மெய்மை..
பொய்சூழா முறைமை
என்றும் இதுவே..

காலம் நெடுகிலும் கைக்கோர்கவே
இந்த ஞாபகப்பாலம்..
ஒர்துளி விழிநீர் விழினும்
விழி சிந்தா ஞானமும்
இதுவேயன்றோ...

உண்மையிது உன்னை தேடினும்
கிடைகாத அஞ்ஞானமதும்
உந்தன் அனுபவம் கற்றுத்தரும்
மெஞ்ஞானமே..

தேடு தேடு தேடலுன்
ஆளுமையில் பிரமிப்பாய்,
என்றோ உனக்கேதெரியாமல்
நீ இயங்கவிருக்கும் வாசகத்தின்
ஒரு சொல் கண்டு..

.





















உயிருக்கும் ஏதோ ஆரூடம்
கேட்கின்றது..
உளிபோட்டு உளைய வைக்கும்
நெஞ்சமதற்கும் சேர்த்து..
கண்ணீர் சுமக்கமட்டுமா இந்தக்கண்கள்
வெந்நீர் பறக்க தீக்குளிக்கிறதே நினைவுச்
சுமையதனால்..

ஒலிகேட்க ஒளியற்றது குருடனின்
ஜாதகம்..
ஒளிதெரிய ஒலியற்றதே செவிடனின்
ஜாதகம்
இரண்டும் இருந்தும் செயலற்றதே
இவளின் ஆரூடம்..

வலிசொல்லி வழிகேட்க விரும்பவில்லை
வழிகேட்டு வலிமறைக்க ஊனமில்லை
இருந்தாலும் இயல்பான நிலைசெல்ல
முடியவில்லை..
நிஜங்களதுவும் நிழல்கள் பட்டியலதில்
இரண்டாம் நிலையா?

பரிணாமங்களுக்கு எங்கே பரிதவிப்பு!
பரிவற்றவனுக்கும் அது இல்லையே..
கணவளவேனும் கைகொடுக்கவில்லை
கனவுகளின் நிஜங்கள்தானும்,

விலையற்றது எனினும் விலை
பொதிக்கிறது.
இப்போதெல்லாம் தனக்குத்தானே
நிஜங்களதுவும்..

மனமாளும் கனவாளனும் கனவாகும்
தருணம்,
கரைதட்டி தரைதேடும் மீன்தானவள்..


.





















வலியதை மிஞ்சி வாழ்வில்லை..
வாழ்வற்ற ஏதோ ஒன்று
வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது..
மனிதன் வாழும் வரையில் ஏன்
மனிதம் வாழும் வரையிலும்
கூடத்தான்..

எட்டி பறிக்க நினைக்கிறது
பட்ட மரத்துக் கனியதையும்
வெட்டாமலே வெகு சுலபமாக
நட்டமாவது என்னவோ நமக்கு
நாமேதான்,
பட்டமென்னவோ பாசம்பாசம்
பாசமாம்..

எம்மை வீழ்த்தும் அதுமட்டும்
என்றும் வீழ்வதே இல்லை.
வீழும் எம்மையும் வீரத்துடனையே
தோள் தட்டி எழுப்புகிறது..
அனுபவமதின் பெயர் கொண்டு...

.

Top Menu

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Top Tabs

About Me

My Photo
கொழும்பு, Sri Lanka
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

கடிகாரம்

இனிதே ரசிக்க..

சில உண்மைகள்..

முகநூல்

நிழலின் பரிணாமங்கள்.

Followers

நீ அம்மா..

பொய்யானஉலகில்
பொய்யற்ற ஓர் ஜீவன் நீயேஅம்மா.ஆயிரம்சொந்தம் வந்தாலும் இறுதிவரையில் நிலைப்பதுன்னுறவுமட்டுமே எமைமட்டுமல்லயெம் பாரங்களையும்
கடைசிவரையில் சுமப்பதும்நீயே..
அதனால் தான் நீஅம்மா

அந்தி நேரத்தென்றல்.

சேரும் சொந்தங்களோ இறுதிவரை நிலைப்பதில்லை,நல்ல நண்பனின் நட்போ சாகும் வரையில் எம்மை விட்டு பிரிவதில்லை.

உன் பேயரை சொல்லும்..

காலம் முழுதும் சேர்ந்திருக்க ஆசைதானாயினும். ஏதோவொரு வழியற்ற வழியொன்றதால் வலிக்குதென்இதயம்.

அழகாய்ப் பூக்குதே..

உண்மையான காதலின் ஆழம் இதுவரை யாராலும் விளங்கவோ,விளக்கவோ படாதது.கண்களால் வந்த காதல் கண்களுக்குமட்டுமே விருந்தாகாமல் மற்றக் கண்களுக்கும் விருந்தாக்கப் படாமல் இதயத்தோடு கலந்து இனிதே வாழட்டும்.

கரையும் நினைவுகளில்

கரையும்நினைவுகளில் நிஜமானவளென்றுமே நீமட்டும்தான் உன்நினைவில் கழியும்பொழுதுகள் தவக்கோலங்களே..

வலி வலி..

சோகத்தின் முகவரி எதுவெனக்கேட்டால் அது உனதெனதுபெயரே.இலக்கம் இல்லாமலேயே எம்மை வந்து சேரும் அஞ்சல்..

உலகம் ஒரு..

காதலின் வேட்கைதான் கண்ணீரின்சாதனைமனதில் நாம்விதைத்தகனவுகள்கானல் நீரில் நாம்தீட்டியகடிதங்கள் ஜென்மங்கள்முழுதும்மழுது தீர்த்தாலும்உறவற்றுப்போன உன்னன்புக்கு ஈடேது?

நன்றி சொல்லவே..

நன்றியென்னறசொல்லில் உன்னன்பை சிறைசெய்ய இயலாது, இருந்தும் நன்றியென்ற சொல்லுக்கு மறுவடிவமோ இன்னும் கண்டறியப்படவில்லை அதனால் தானிந்தநன்றி.

நிலவோடும் மலரோடும்..

நிழலின் பரிணாமங்கள் என்றும் இருளதற்கே பரிந்துரைக்கப் படுகிறது.. அதேபோல் ஏனென்ன்ற கேள்வியும் என்றுமே தனிமையதையே நேசித்து எம்மையும்மதற்குத் துணையாக்குகிறது, தன்தனிமையைப் போக்குவதற்காக..

கங்கை நதியே..

எம்மை நேசிக்கும் பந்தங்களே, சொந்தமாக சந்தேகத்தை ஆதரிக்கும் போது, விடியும் திசையோ விதியை சார்ந்தது...

நன்றி சொல்லவே..

துயரே வரமெனப்பெற்ற எனக்கு,சுகவரி சொன்ன தேவனே, வாழும்வரையுன் நிழலெனத் தொடர்ந்திருப்பேனெனன்பே.

காதல் இல்லை..

உன் வாழ்கையை எழுதியவன் யாரோ அதைவாழும் நாட்கள் மட்டுமேயுன்னோடானது. உறவின் உச்சக்கட்டம் சாதலையேசார்ந்தது,அதையும் கொஞ்சம் புரிந்து கொள்மனிதா!

ஒருமுறை தான்.

கண்களால் மௌனித்து
மௌனமகஉறவாடியயெம்
உள்ளுணர்களெம்முள்ளே மௌணமாக மரணிக்கிறதின்று உண்மையதின் நிசப்தத்தின் மெய்யிதுவோ சிதரலுணர்வுகளின் மரணமதிலுணர்கிறோம் பெற்றவரின்பாசமதை. சிலதரக்காலத்தின் விடுகதையதற்கு விடையாவதெம் காதலே அன்றிவேறில்லை தவிக்கிறது தினதினம்மனது உறவுகளினதுசஞ்சீவிகேட்டு...

கங்கைக்கரை மன்னனடி..

என்னுள்ளம் மட்டுமல்ல உயிரும் உன்கையில்தான். நெஞ்சிலெழும்அன்பலையில் மூழ்கிப்போனவள் நானே ஜென்மஜென்மங்கலானாலும் எனைப்பந்தாடுவதுன் நினைவு மட்டுமே...

எழுதாத விதியிதுவோ

குற்றம் புரியாமலயே வேதனைகளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பது தான்னிந்தக் காதலின்எழுதாதவிதியோ!

நீதான்வேண்டும்.

நினைவுகளும்சுமையென
மாறவே தள்ளடுகிறது என்னுயிருமமுன்னன்பின்றி..

என்னமறந்த பொழுதும்..

உறக்கத்திலுமுன் நினைவுகளை மறக்காது உன்பக்கம் திருப்பும் விந்தை என்னவோ உன்னோடான என்நினைவுகளுக்கே இருக்கிறது.

உயிரேஉயிரின்.

உறவுகள்தொடர்கதையில் கானாமல்போவதென்னவோ நாம்தான் உயிர்பிரிந்தாலும்
எம்மையாட்கொண்டஉறவின்
ஞாபகங்கள் எம்மைவிட்டுப்
போவதில்லை....

தென்றல் காற்றே...

உன்பிரிவின் ஒவ்வொரு நொடியிலுமென்னாயுளின் மறைநிசப்தமதுவே ஒழிந்திருக்கிறது. மௌனங்களேயென் வாழ்வானாலும் அதையும் மொழிபெயர்க்கவுன் உள்ளமதுவே வேண்டும் தருவாயா என்னாயுள் உள்ளவரை.

நான்னுறங்க வழியில்லையே

உன்பிரிவால் நாதியற்று
தவிப்பது நான்மட்டுமல்ல
நம்வாழ்வில் நாம் கண்ட
சந்தோஷநிமிடங்களுந்தான்.

உணராதோ என்னுயிர்துடிப்பு

வாழ்நாற்களுக்கேசொந்தமற்ற நாம்சொந்தங்களைநாடி விதியைச் சாடுவதேனோ?

ஒருமூன்றாம்.

சாபத்தையே வரமாக
மாற்றியவனே நாளும்
துதித்து போற்றினாலும்
என்றென்றுமென்கடவுள்நீதான்.

கூடு எங்கே..?

உள்ள மனக்கிடுக்கை மட்டுமே உறவாகிவிட்ட எமக்குபோகும் வழியோ தெரியவில்லை ஆனால் பயணம் மட்டும்தொடர்ந்து கொண்டேதான்னிருக்கிறது....

எங்கிருந்து..

Powered by Blogger.

Pages