கருவில் நாம் துளிர்த்த நாள்கொண்டு
கனவுகளில் தளிர்க்கும் அவள் கற்பனைகள்
அளவல்லவே..
வியாகியானம் பல விவாதித்தாலும்
விமர்சனம் எனும் சொல்லுக்குள்
விபரிக்க இயலாதது அவளன்பேயன்றி
வேறில்லையே..
உன் தாய்மையில் வியந்து போகிறேன்
இந்நோடியும் உன்மடிதரும்
நிம்மதிக்கணம் கண்டு..
உயிரால் உயிர் பிரியும் தருணம் வரை
உன்னுயிரினில் விழுந்தேனும்,
உன் சுகமற்ற போழுதுகளை நான்
சுமப்பேன் தாயே..
உன் சுமை சுமக்கும் சுமையேற்றியாக
ஓரு பொழுதுதேனும் வரம் கொடு தாயே
ஒருநோடி நிம்மதிப் பெருமூச்சு எனக்குள்
நுகர...
வாழ் நாளின் நான் வாழ்ந்த ஓர் துளி
பலனை நான் உணர...
.