
காதல் சொன்னதும் நீ
காயப்படுத்தியதும் நீ தான்.
காயமாற்றும் மூலிகையதோ
உன் வசம் இருந்தும் ஏன்
காயமாற்ற நினைக்கவில்லை?
வலியை நானே அன்பெனும்
விலை கொடுத்து வாங்கினேன்..
என் அன்பு எப்படி விலை
மதிப்பற்றதோ நீதந்த வலியதுவும்
அளவற்றே தினம் வதைக்கிறது.
வலியதையும் திளைக்க வைத்தவன்
நீ, நெருடல் துளியும் இல்லாமல்
இன்னும் உன் நாடகம்
என் வீட்டில் அரங்கேறுகிறது.
அம்மாவை பார்ப்பதாக
வருகிறாய்,
என்னை பார்த்து நலமா
என்கிறாய்,
என் நலமோ உன்னிடம்
சிறைப்பட்டு எண்ணற்ற
நாட்கள் ஆகின்றதே!
.
0 கருத்துரைகள்:
Post a Comment