
மறந்து விடு!
எவ்வளவு எளிதான
வார்த்தை உனக்கு..
சிறிய கலக்கமேனும்
உன்னுல் இருப்பதாய்
நானறியேன்..
காலத்தின் கட்டாயந்தான்
என்னிடத்தில் உன்னை
சேர்த்ததா
நீசொல்வதைப் போல்..
என்ன கட்டாயம் வந்தது
அப்படி அந்தக்காலத்திற்கு?
உன்னை நீ நியாயப்படுத்த
ஏன் அநியாய குற்றமாக
காலத்தை பழிசொல்கிறாய்?
உன்னிடம் வழியில்லாததாலா?
அந்நியரின் ஆட்சிக்காலம்
முடிந்தாயிற்று ஆயினும்
உன்போன்று மனமற்ற
அநியாயக்காரர்களிடமல்லவா
இன்று எங்களைப் போன்றோரின்
மன ஆட்சி விடுதலையற்று
தவிக்கிறது.
.
0 கருத்துரைகள்:
Post a Comment