
கை கட்டி நின்று
கண்கட்டி போன காதலை
சுவாசித்தவளிவளோ பேதை
தான்!
போதையது தலைகொள்ள
பேதையிவள் விழியதை
ஒதுக்கி விட்டு,
எள்ளி நகையாடும் வார்த்தை
வாளதால் ஊமை பட்டம்
இவளுக்களித்து,
மட்டமாக பட்டமளிப்பு விழாதனையும்
கோலாகலமாகவே நடத்திச்
சென்று விட்டாய்..
என் குரலற்ற தேசம்தான்
உன்நேசம் என்றால்
பெயர் சூடா எனக்கு
பெயர் சூட்டும் மன்னனாக
இருந்து விட்டு போ.
.
0 கருத்துரைகள்:
Post a Comment