
என் கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றும் உன் மீது
நான் கொண்ட அன்பிற்கு
சாட்சிகள்.....
அந்த சாட்சியை உன்
கண்களுக்கு காட்சியாக்க
நினைப்பதுதானய்யா
கொடுமை!
இப்போது தான் புரிகிறது
நீகாதலித்தது என் காதலின்
ஆழத்தையல்ல என் கண்ணீரின்
ஆழத்தையென்று...
என் இதயத்தில் ஒலிக்கும்
ஒவ்வொரு சப்தமும்
உன்னையே உச்சரிக்கிறது.
என் காதுகளில் கேட்கும்
ஒவ்வொரு சத்தமும் உன்
குரலாகவே கேட்கிறது..
வாய்மொழி அது கூட
உன் பெயரயே வேண்டியே
நிற்கிறது பார்க்கும் இடமெல்லாம்
நீயிருக்க மாட்டாயா என்றோர்
ஏக்கம்!
பார்த்தால் எங்கே ஆயுல்
முழுதும் அந்த வேதனை
தொடருமோ என்றோர் பயமும்
கூடவே எச்சரிக்கிறது.
உனக்கே தெரியாமல் உன்
புகைப்படம் என்னிடம்..
எனக்கே இல்லாத நிஜம்
இன்று நிழல் படமாக
என்னை ஆதரிக்கிறது..
உன் ஞாபங்கள் மறந்த
மணித்துளிகள் என்
நேரங்களிலேயே இல்லை.
இனியும் இருக்க போவதில்லை..
.
0 கருத்துரைகள்:
Post a Comment