கவிச்சாரல்

அணு அணுவாக வலிக்கும் வலியதில் அன்பே வலியது..

அன்பினில் அடங்கும் இதயம் அமைதிதனில் தளிர்த்து துளிர்க்கும்.வருக _/\_தோழமையே





















ஏதோவொரு சஞ்சலம் எட்டிபிடிக்கிறது
இந்நொடி..
எல்லாமே ஒரு வினாடிக்குள் எட்டாக்
கனியென கசந்து விடுமோ என்ற
வார்த்தை தவிர்ந்த மொழி எனக்குள்
மெல்லவே கசிகின்றது..
ஏனென்று என்னை கேட்க எச்சரிக்கை
ஒன்றை விட்டு செல்கிறது எண்ணற்ற
வடிவங்களில் தன் மொழிவளந்தனில்..

இருள்மட்டுமே சூழ்ந்த இதயப்பரப்பில்
இயல்பாக இயங்குகின்றது
விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட 
இருதய அரங்கம்..

அன்னையின் தாலாட்டு அதோ என்
செவிகளில் மட்டும் தெளிவாக
கேட்கிறது..
அப்பாவிடம் தவழ்ந்த நாட்கள் விழி
சேமிப்பு அறையில் எனக்கு மட்டும்
தெளிவாகத் தெரிகிறது..

அன்றுமுதல் இன்றுவரை ஆதிக்கம்
முழுதும் தந்தையின் தோளேயன்றி
வேறொன்றாக நானறியேன்.
என்தேவை அறியும் அவர் மொழி
என்விழி ஒன்றுதான்..

அம்மா என்றழைக்கும் தொனியில்
என்னை உணரும் தாயின்
தலையணைப்பு முத்தம்..

கைகட்டி தூண் சாயும் பெரியண்ணாவின்
பார்வையில் நான் அமைதியான நாற்கள்
எண்ணிலடங்காதது..
கண்ணியம் ஒன்றே கனிவெனும் வார்தை
மொழிதலிலும் சிறுகுட்டோடு ஒற்றை
கண் அசைவில் நகர்தலில் உண்டாகும்
உட்சாகம் அப்பப்பா..

பல சந்தர்பங்களில் பலவகைகளில்
வரையறையின்றி என்னிடம் பணம்
இழந்த அண்ணன்களின் பெயர்களை
நான் பொதித்த அவரவர் பாணத்தாள்ச்
சுவர்களை எடுத்துப் பார்கிறேன்..

நினைவறிந்த நாள்முதல் இன்று
வரையில் என்னோடு இருக்கும்
உண்மையான அன்பானவர்களின்
முகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக
என்மனக்கண்முன் நிழலாடுகிறது
ஏன் காரணமேதுமின்றி பிரிவெனும்
சொல்லோடு கைகுழுக்கியவர்களின்
முகங்களும் கூடவே என்னை
நிர்பந்திக்கிறது..

நினைவுகள் நினைவுகளாகவே நடமாட
கற்பித்த அனைத்து ஆசிரியர்களின்
தொடர்புகளை எங்கெங்கோ தேடி
அழைக்கிறேன்..
தலை நிமிர்த்தியவர்களை தலை
வணங்குவதில் தயக்கம் இல்லை
என்றாலும் ஏனிந்த தாமத
அலவலாவல்!
மனதலவில் உடைந்தே  உணர்ந்தும் 
உறைக்க இயலவில்லை..

ஏதோ பயமொன்று பயணிக்க
ஆரம்பித்து இருக்கிறது இன்று..
தடையமோ தயக்கமோ இன்றி.
நால்வரின் நான்கு கைகள் சுமந்த
அந்த நீள்சதுர பெட்டியுள்ளிருந்து
எனக்குள் நானே பேசுவதாக ஓர்
பிரம்மை..
தனிப்பயணம் அதுவும் இயங்க
மறுக்கும் உறுப்புகளோடு.
சுற்றத்தாரின் கண்ணீர் ஒன்றேதான் 
பிறப்பின் வெகுமதியா..

இமையாமல் விழிகளினூடே வழியும்
கண்ணீரின் சுமை ஏதோ கனக்கிறது.
எதற்கிந்த பிறப்பு எதற்கிந்த இறப்பு
ஆராய்ந்து பார்க்கையில் அனைத்தும்
பூஜியம் தான்..
பிறக்கும் போது அவனே அழுகிறான்.
இறக்கும்போது உற்றாரை
அழுவிக்கின்றான்.
மரணிக்கும் வரையில் அவன் மனிதன்
மரணித்தபின் நான் யார்!
சில கேள்விகளுக்கு விடையும் என்றும்
கேள்வியாகவே தொடர்கின்றது..

.

5 கருத்துரைகள்:

மரணிக்கும் வரையில் அவன் மனிதன்
மரணித்தபின் நான் யார்..
சில கேள்விகளுக்கு விடையும் என்றும்
கேள்வியாகவே தொடர்கின்றது..


.....இது ஒரு ஆன்மீக தேடல்..... ஒரு ஆத்துமாவின் தேடலும் கூட.

நிச்சயமாக சித்ரா...

valuvari porradu!


படித்தேன் பரவசப்பட்டேன் .
ஒரே கவிதையில் ...!!
உன் வரலாறை நான் உணர்ந்தேன் .
உன் பிறப்பின் துவக்கம் முதல் ...
-தவம்


படித்தேன் பரவசப்பட்டேன் .
ஒரே கவிதையில் ...!!
உன் வரலாறை நான் உணர்ந்தேன் .
உன் பிறப்பின் துவக்கம் முதல் ...
-தவம்

Top Menu

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Top Tabs

About Me

My Photo
கொழும்பு, Sri Lanka
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

கடிகாரம்

இனிதே ரசிக்க..

சில உண்மைகள்..

முகநூல்

நிழலின் பரிணாமங்கள்.

Followers

நீ அம்மா..

பொய்யானஉலகில்
பொய்யற்ற ஓர் ஜீவன் நீயேஅம்மா.ஆயிரம்சொந்தம் வந்தாலும் இறுதிவரையில் நிலைப்பதுன்னுறவுமட்டுமே எமைமட்டுமல்லயெம் பாரங்களையும்
கடைசிவரையில் சுமப்பதும்நீயே..
அதனால் தான் நீஅம்மா

அந்தி நேரத்தென்றல்.

சேரும் சொந்தங்களோ இறுதிவரை நிலைப்பதில்லை,நல்ல நண்பனின் நட்போ சாகும் வரையில் எம்மை விட்டு பிரிவதில்லை.

உன் பேயரை சொல்லும்..

காலம் முழுதும் சேர்ந்திருக்க ஆசைதானாயினும். ஏதோவொரு வழியற்ற வழியொன்றதால் வலிக்குதென்இதயம்.

அழகாய்ப் பூக்குதே..

உண்மையான காதலின் ஆழம் இதுவரை யாராலும் விளங்கவோ,விளக்கவோ படாதது.கண்களால் வந்த காதல் கண்களுக்குமட்டுமே விருந்தாகாமல் மற்றக் கண்களுக்கும் விருந்தாக்கப் படாமல் இதயத்தோடு கலந்து இனிதே வாழட்டும்.

கரையும் நினைவுகளில்

கரையும்நினைவுகளில் நிஜமானவளென்றுமே நீமட்டும்தான் உன்நினைவில் கழியும்பொழுதுகள் தவக்கோலங்களே..

வலி வலி..

சோகத்தின் முகவரி எதுவெனக்கேட்டால் அது உனதெனதுபெயரே.இலக்கம் இல்லாமலேயே எம்மை வந்து சேரும் அஞ்சல்..

உலகம் ஒரு..

காதலின் வேட்கைதான் கண்ணீரின்சாதனைமனதில் நாம்விதைத்தகனவுகள்கானல் நீரில் நாம்தீட்டியகடிதங்கள் ஜென்மங்கள்முழுதும்மழுது தீர்த்தாலும்உறவற்றுப்போன உன்னன்புக்கு ஈடேது?

நன்றி சொல்லவே..

நன்றியென்னறசொல்லில் உன்னன்பை சிறைசெய்ய இயலாது, இருந்தும் நன்றியென்ற சொல்லுக்கு மறுவடிவமோ இன்னும் கண்டறியப்படவில்லை அதனால் தானிந்தநன்றி.

நிலவோடும் மலரோடும்..

நிழலின் பரிணாமங்கள் என்றும் இருளதற்கே பரிந்துரைக்கப் படுகிறது.. அதேபோல் ஏனென்ன்ற கேள்வியும் என்றுமே தனிமையதையே நேசித்து எம்மையும்மதற்குத் துணையாக்குகிறது, தன்தனிமையைப் போக்குவதற்காக..

கங்கை நதியே..

எம்மை நேசிக்கும் பந்தங்களே, சொந்தமாக சந்தேகத்தை ஆதரிக்கும் போது, விடியும் திசையோ விதியை சார்ந்தது...

நன்றி சொல்லவே..

துயரே வரமெனப்பெற்ற எனக்கு,சுகவரி சொன்ன தேவனே, வாழும்வரையுன் நிழலெனத் தொடர்ந்திருப்பேனெனன்பே.

காதல் இல்லை..

உன் வாழ்கையை எழுதியவன் யாரோ அதைவாழும் நாட்கள் மட்டுமேயுன்னோடானது. உறவின் உச்சக்கட்டம் சாதலையேசார்ந்தது,அதையும் கொஞ்சம் புரிந்து கொள்மனிதா!

ஒருமுறை தான்.

கண்களால் மௌனித்து
மௌனமகஉறவாடியயெம்
உள்ளுணர்களெம்முள்ளே மௌணமாக மரணிக்கிறதின்று உண்மையதின் நிசப்தத்தின் மெய்யிதுவோ சிதரலுணர்வுகளின் மரணமதிலுணர்கிறோம் பெற்றவரின்பாசமதை. சிலதரக்காலத்தின் விடுகதையதற்கு விடையாவதெம் காதலே அன்றிவேறில்லை தவிக்கிறது தினதினம்மனது உறவுகளினதுசஞ்சீவிகேட்டு...

கங்கைக்கரை மன்னனடி..

என்னுள்ளம் மட்டுமல்ல உயிரும் உன்கையில்தான். நெஞ்சிலெழும்அன்பலையில் மூழ்கிப்போனவள் நானே ஜென்மஜென்மங்கலானாலும் எனைப்பந்தாடுவதுன் நினைவு மட்டுமே...

எழுதாத விதியிதுவோ

குற்றம் புரியாமலயே வேதனைகளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பது தான்னிந்தக் காதலின்எழுதாதவிதியோ!

நீதான்வேண்டும்.

நினைவுகளும்சுமையென
மாறவே தள்ளடுகிறது என்னுயிருமமுன்னன்பின்றி..

என்னமறந்த பொழுதும்..

உறக்கத்திலுமுன் நினைவுகளை மறக்காது உன்பக்கம் திருப்பும் விந்தை என்னவோ உன்னோடான என்நினைவுகளுக்கே இருக்கிறது.

உயிரேஉயிரின்.

உறவுகள்தொடர்கதையில் கானாமல்போவதென்னவோ நாம்தான் உயிர்பிரிந்தாலும்
எம்மையாட்கொண்டஉறவின்
ஞாபகங்கள் எம்மைவிட்டுப்
போவதில்லை....

தென்றல் காற்றே...

உன்பிரிவின் ஒவ்வொரு நொடியிலுமென்னாயுளின் மறைநிசப்தமதுவே ஒழிந்திருக்கிறது. மௌனங்களேயென் வாழ்வானாலும் அதையும் மொழிபெயர்க்கவுன் உள்ளமதுவே வேண்டும் தருவாயா என்னாயுள் உள்ளவரை.

நான்னுறங்க வழியில்லையே

உன்பிரிவால் நாதியற்று
தவிப்பது நான்மட்டுமல்ல
நம்வாழ்வில் நாம் கண்ட
சந்தோஷநிமிடங்களுந்தான்.

உணராதோ என்னுயிர்துடிப்பு

வாழ்நாற்களுக்கேசொந்தமற்ற நாம்சொந்தங்களைநாடி விதியைச் சாடுவதேனோ?

ஒருமூன்றாம்.

சாபத்தையே வரமாக
மாற்றியவனே நாளும்
துதித்து போற்றினாலும்
என்றென்றுமென்கடவுள்நீதான்.

கூடு எங்கே..?

உள்ள மனக்கிடுக்கை மட்டுமே உறவாகிவிட்ட எமக்குபோகும் வழியோ தெரியவில்லை ஆனால் பயணம் மட்டும்தொடர்ந்து கொண்டேதான்னிருக்கிறது....

எங்கிருந்து..

Powered by Blogger.

Pages