கவிச்சாரல்

அணு அணுவாக வலிக்கும் வலியதில் அன்பே வலியது..

அன்பினில் அடங்கும் இதயம் அமைதிதனில் தளிர்த்து துளிர்க்கும்.வருக _/\_தோழமையே





















கல்லிதனை களவாட நினைக்கிறதிந்த
கள்ளமற்ற மனம் வீணேதான்,
குழந்தையல்ல தானென்பதை மறந்து..

தெளிவற்ற நிலைதனிந்ததும் இன்று
கார்த்திகை பூத்தேடி அழைகிறதிந்த
மனது - காவலற்ற நப்பாசை தனில்
கார்த்திகைமாத இதமதை அதுதானும்
மீட்டித் தராதா என்று..

.





















பிரியமானவளே எனச்சொல்லி
பிரிந்தும்நீ பிரியாமல் இவளுள்,
பிரியாவிடை தினம் தருகின்றாய்
பிரியமானவன் நீயெனச் சொன்னதாலா!

.





















நல்ல அனுமானங்கள் அதுவும்
நாதியற்று புலனின்றி புலப்படுகின்றது
நங்கையவள் மனம் போலவே ,,,,

தவிப்போடு தானிருக்கும் உள்ளமதற்கு
தவறாது பரிதவிப்பதையும் பத்திரமாக
அரங்கேற்றிச் சென்றிருக்கிறாய்..

கைகொடுத்து வரவேற்றாள் அவளும்மெனினும்
களவாடித்தான் போனது கபட மனதோடவள்
கரந்தனை கைகொடுத்த நல்வினைக்காவே..

.





















தேய்ந்து கொண்டிருக்கும் உயிரது
வாய்மையுடனே நாளும் வரட்டிச்
செல்கிறது பாரீர்..
பாராமுகமதுவோ முட்கள் தனிலும்
முகமூடி அணிதலை போன்றதே
பாரினில்..

.





















பொய்யற்ற ஒன்றை இவள்
மெய்யாக போலியிடமே
தேடுகிறாள்.

தேய்ந்து கொண்டிருக்கும் உயிரது
வாய்மையுடனே நாளும் வரட்டிச்
செல்கிறது பாரீர்

வாஞ்சையுடனே இவளையந்த
போலியுரை தாங்கிய வாளதுவும்
வாழா அந்நாவின் தலைமைதனில்..

.





















வலிகளின் ஆதிக்கமதோ உயிரதில்
உளியரைந்தும் புறட்டி போடுகிறது
நாளும் பாழ்லதில் வருடிநின்ற
அனைத்துமின்று நெருஞ்சி முள்ளதில்
மூழ்கடித்தே மூச்சவிழ்கிறது
கணம் கணமாக..

கனம்காணா பொழுதுகள் தானும்
கல்மனதோடு பூத்துபுறப்பட நினைக்கிறது
உனது பொய்கள்தானும் இவளின்
மெய்யதையும்சேர்த்து தன்னோடு
தானேயாதலால் தனல்நினைவதிலும்
தவழ்ந்தே தவிக்கிறது மனது..

பொய்தனில் ஏமாற்றத்தின் உச்சம்வரை
உள்ளிட்டு சென்றாலும் இன்னும் இன்னும்
அவன்நினைவார்த்தைகளே நிலையென
வெற்றிக்கொடிதனை நாட்டுகின்றது
நாழிதோறும் நாலாபக்கங்களிலும் மீளாமலே
என்னில்நின்றும் மீட்சிகாணாமலேயே..

கொடிநிழலதில் இளைப்பாறி கொண்டு
எதையும் இழக்கமால் நீநிதர்சனந்தனை
நியாயமின்றி பேசுகின்றாய் நிஜமாய்
அனைத்தையும் இழந்தவளிடம்-தெரிந்தும்
தெளிவற்றவள் இவள் என்பதாலா??

.





















காலம் ஏதினி கைகோர்த்துச் செல்ல..
வாழா நாள்தனிலும் வாழ்ந்தோர்
கோடி கோடி கற்பனைதனில் ஆழ்ந்தே
தினதினம்...

ஆழமற்ற ஒன்றதிலும் நிதநிதம்
முழ்கிப்போவதில் முதலிடம் இந்த
மனம் ஒன்றுதான்..

.

Top Menu

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Top Tabs

About Me

My Photo
கொழும்பு, Sri Lanka
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

கடிகாரம்

இனிதே ரசிக்க..

சில உண்மைகள்..

முகநூல்

நிழலின் பரிணாமங்கள்.

Followers

நீ அம்மா..

பொய்யானஉலகில்
பொய்யற்ற ஓர் ஜீவன் நீயேஅம்மா.ஆயிரம்சொந்தம் வந்தாலும் இறுதிவரையில் நிலைப்பதுன்னுறவுமட்டுமே எமைமட்டுமல்லயெம் பாரங்களையும்
கடைசிவரையில் சுமப்பதும்நீயே..
அதனால் தான் நீஅம்மா

அந்தி நேரத்தென்றல்.

சேரும் சொந்தங்களோ இறுதிவரை நிலைப்பதில்லை,நல்ல நண்பனின் நட்போ சாகும் வரையில் எம்மை விட்டு பிரிவதில்லை.

உன் பேயரை சொல்லும்..

காலம் முழுதும் சேர்ந்திருக்க ஆசைதானாயினும். ஏதோவொரு வழியற்ற வழியொன்றதால் வலிக்குதென்இதயம்.

அழகாய்ப் பூக்குதே..

உண்மையான காதலின் ஆழம் இதுவரை யாராலும் விளங்கவோ,விளக்கவோ படாதது.கண்களால் வந்த காதல் கண்களுக்குமட்டுமே விருந்தாகாமல் மற்றக் கண்களுக்கும் விருந்தாக்கப் படாமல் இதயத்தோடு கலந்து இனிதே வாழட்டும்.

கரையும் நினைவுகளில்

கரையும்நினைவுகளில் நிஜமானவளென்றுமே நீமட்டும்தான் உன்நினைவில் கழியும்பொழுதுகள் தவக்கோலங்களே..

வலி வலி..

சோகத்தின் முகவரி எதுவெனக்கேட்டால் அது உனதெனதுபெயரே.இலக்கம் இல்லாமலேயே எம்மை வந்து சேரும் அஞ்சல்..

உலகம் ஒரு..

காதலின் வேட்கைதான் கண்ணீரின்சாதனைமனதில் நாம்விதைத்தகனவுகள்கானல் நீரில் நாம்தீட்டியகடிதங்கள் ஜென்மங்கள்முழுதும்மழுது தீர்த்தாலும்உறவற்றுப்போன உன்னன்புக்கு ஈடேது?

நன்றி சொல்லவே..

நன்றியென்னறசொல்லில் உன்னன்பை சிறைசெய்ய இயலாது, இருந்தும் நன்றியென்ற சொல்லுக்கு மறுவடிவமோ இன்னும் கண்டறியப்படவில்லை அதனால் தானிந்தநன்றி.

நிலவோடும் மலரோடும்..

நிழலின் பரிணாமங்கள் என்றும் இருளதற்கே பரிந்துரைக்கப் படுகிறது.. அதேபோல் ஏனென்ன்ற கேள்வியும் என்றுமே தனிமையதையே நேசித்து எம்மையும்மதற்குத் துணையாக்குகிறது, தன்தனிமையைப் போக்குவதற்காக..

கங்கை நதியே..

எம்மை நேசிக்கும் பந்தங்களே, சொந்தமாக சந்தேகத்தை ஆதரிக்கும் போது, விடியும் திசையோ விதியை சார்ந்தது...

நன்றி சொல்லவே..

துயரே வரமெனப்பெற்ற எனக்கு,சுகவரி சொன்ன தேவனே, வாழும்வரையுன் நிழலெனத் தொடர்ந்திருப்பேனெனன்பே.

காதல் இல்லை..

உன் வாழ்கையை எழுதியவன் யாரோ அதைவாழும் நாட்கள் மட்டுமேயுன்னோடானது. உறவின் உச்சக்கட்டம் சாதலையேசார்ந்தது,அதையும் கொஞ்சம் புரிந்து கொள்மனிதா!

ஒருமுறை தான்.

கண்களால் மௌனித்து
மௌனமகஉறவாடியயெம்
உள்ளுணர்களெம்முள்ளே மௌணமாக மரணிக்கிறதின்று உண்மையதின் நிசப்தத்தின் மெய்யிதுவோ சிதரலுணர்வுகளின் மரணமதிலுணர்கிறோம் பெற்றவரின்பாசமதை. சிலதரக்காலத்தின் விடுகதையதற்கு விடையாவதெம் காதலே அன்றிவேறில்லை தவிக்கிறது தினதினம்மனது உறவுகளினதுசஞ்சீவிகேட்டு...

கங்கைக்கரை மன்னனடி..

என்னுள்ளம் மட்டுமல்ல உயிரும் உன்கையில்தான். நெஞ்சிலெழும்அன்பலையில் மூழ்கிப்போனவள் நானே ஜென்மஜென்மங்கலானாலும் எனைப்பந்தாடுவதுன் நினைவு மட்டுமே...

எழுதாத விதியிதுவோ

குற்றம் புரியாமலயே வேதனைகளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பது தான்னிந்தக் காதலின்எழுதாதவிதியோ!

நீதான்வேண்டும்.

நினைவுகளும்சுமையென
மாறவே தள்ளடுகிறது என்னுயிருமமுன்னன்பின்றி..

என்னமறந்த பொழுதும்..

உறக்கத்திலுமுன் நினைவுகளை மறக்காது உன்பக்கம் திருப்பும் விந்தை என்னவோ உன்னோடான என்நினைவுகளுக்கே இருக்கிறது.

உயிரேஉயிரின்.

உறவுகள்தொடர்கதையில் கானாமல்போவதென்னவோ நாம்தான் உயிர்பிரிந்தாலும்
எம்மையாட்கொண்டஉறவின்
ஞாபகங்கள் எம்மைவிட்டுப்
போவதில்லை....

தென்றல் காற்றே...

உன்பிரிவின் ஒவ்வொரு நொடியிலுமென்னாயுளின் மறைநிசப்தமதுவே ஒழிந்திருக்கிறது. மௌனங்களேயென் வாழ்வானாலும் அதையும் மொழிபெயர்க்கவுன் உள்ளமதுவே வேண்டும் தருவாயா என்னாயுள் உள்ளவரை.

நான்னுறங்க வழியில்லையே

உன்பிரிவால் நாதியற்று
தவிப்பது நான்மட்டுமல்ல
நம்வாழ்வில் நாம் கண்ட
சந்தோஷநிமிடங்களுந்தான்.

உணராதோ என்னுயிர்துடிப்பு

வாழ்நாற்களுக்கேசொந்தமற்ற நாம்சொந்தங்களைநாடி விதியைச் சாடுவதேனோ?

ஒருமூன்றாம்.

சாபத்தையே வரமாக
மாற்றியவனே நாளும்
துதித்து போற்றினாலும்
என்றென்றுமென்கடவுள்நீதான்.

கூடு எங்கே..?

உள்ள மனக்கிடுக்கை மட்டுமே உறவாகிவிட்ட எமக்குபோகும் வழியோ தெரியவில்லை ஆனால் பயணம் மட்டும்தொடர்ந்து கொண்டேதான்னிருக்கிறது....

எங்கிருந்து..

Powered by Blogger.

Pages